
டெக்சாஸ்: அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 6 மாடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த மாடுகளின் தாடை மற்றும் நாக்குகள் வெட்டப்பட்டுள்ளன. இருந்தும் ரத்தம் ஏதும் சிந்தியதற்கான தடயம் எதுவும் மாடுகள் உயிரிழந்த இடங்களில் இல்லை என தெரிகிறது. இது குறித்து உள்ளூர் அரசு நிர்வாகத்தின் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெக்சாஸின் ஊரக பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரம் இந்த மாடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடுகளின் நாக்குகள் அறுவை சிகிச்சை முறையின் கீழ் நேர்த்தியாக வெட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாடுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் ரத்தம் சிந்தியதற்கான தடயம் மற்றும் வாகனம் வந்து சென்றதற்கான டயர் மார்க் கூட எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wJjbUMq
0 Comments