
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நேற்று இரவு தாய் மற்றும் இரு குழந்தைகள் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படை அமைத்திருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் விழுப்புரம் சரக பொறுப்பு டிஐஜி பகலவன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது முதல் மனைவி பானுமதி. பானுமதியோடு கருத்து வேறுபாடு காரணமாக விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லைக் கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி (35) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு, அவருடன் கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் வளர்மதிக்கு 11 வயது மகனும், 8 மாத கைக் குழந்தையும் இருந்து வந்த நிலையில், கணவர் மணிகண்டன் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வளர்மதி தனது மூத்த மகன் தமிழரசன் (11), 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வீட்டில் வசித்துவந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vhr8QfW
0 Comments