Crime

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு டெல்லி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள சாகேத் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞருடன் அந்தப் பெண் நின்றிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

அந்தப் பெண்ணை குறி வைத்து நான்கு முதல் ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/THX1EIZ

Post a Comment

0 Comments