Crime

மும்பை: ‘பாலிவுட் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கான் இந்த மாதம் 30-ம் தேதி கொல்லப்படுவார்' என்று அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை போலீஸார் கூறுகையில், "திங்கள்கிழமை (ஏப்.10) மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது.பேசியவர் தான்னை ராக்கி பாய் என்றும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் தான் ஒரு பசுப் பாதுகாப்பாளர் என்றும் கூறிய அந்த நபர், இந்த மாதம் (ஏப்ரல்) 30-ம் தேதி பாலிவுட் நடிகர் சல்மான் கானை தான் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்" என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vtSZygO

Post a Comment

0 Comments