Crime

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 15 வயது சிறுமியை கொலை செய்து, உடலை இரண்டு பாகங்களாக வெட்டி தலை ஒரு பையிலும், உடலின் மற்ற பாகங்கள் வேறொரு பையிலும் வைத்து மறைத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளானர். கைது செய்யப்பட்ட அந்த நபர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் கணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமியை, கொலையாளி திருமணம் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை அவர் காணவில்லை என்ற தகவல் காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சில மணி நேரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டதையும், அவரது உடலையும் கண்டெடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XmybPDw

Post a Comment

0 Comments