
பெரம்பலூர்: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை அம்மன் நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மனைவி ரமா பிரபா(40). ஞானசேகரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், ரமா பிரபா தனது 2 பெண் குழந்தைகளுடன் லால்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், ரமா பிரபாவின் வீட்டின் கதவு நேற்று திறந்து கிடந்ததைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ரமா பிரபா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IQp83lG
0 Comments