Crime

சிவகங்கை: சிவகங்கை அருகே பெண் போலீஸ் முன்னிலையில், அவரது கணவரை வெட்டி வழிப்பறி நடந்துள்ளது. ஒரே நாளில் தொடர்ந்து 3 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை அருகே வரிச்சியூரைச் சேர்ந்த மீன் வியாபாரி செக்கடியான் (38). இவர், நேற்று முன்தினம் இரவு சிவகங்கை அருகே சாமியார்பட்டி கண்மாயில் மீன் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்தார். மதுரை சாலையில் கரும்பாவூர் விலக்கு அருகே வந்தபோது, அவரை வழிமறித்த 3 பேர் வாளால் வெட்டி, அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ysxScv

Post a Comment

0 Comments