
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய தொலை தொடர்பு நிறுவனத்தில் உரையாடல் பதிவான டேப்பை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளை போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக முதலில் நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து 10 பேரை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4gfi7ck
0 Comments