Crime

சென்னை: சென்னையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக்ரேஸ் என்ற பெயரில் சாகசத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்யுமாறு மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுவோரைப் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jUr4sMb

Post a Comment

0 Comments