Crime

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயிலில் பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற வெளிமாநிலத்தவர் ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏனநல்லூரைச் சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி செல்வி (51). மாத்தூரில் செங்கல்சூளை நடத்தி வரும் இவர்கள் 2 பேரும், கடந்த 7-ம் தேதி மாலை தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், செல்வி அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலி சங்கிலியைப் பறிக்க முயன்றனர். செல்வி சங்கிலியை விடாமல் பிடித்து கொண்டு கூச்சலிடவே 2 பேரும் தப்பியோடிவிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hDWCg7B

Post a Comment

0 Comments