
சென்னை: சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள், நண்பர்கள் போராட்டம் நடத்தினர். பெருங்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் விளையாடிய ஜெய் கணேஷுக்கும், சக வழக்கறிஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m4YcT3S
0 Comments