
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீத வட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.
ஆனால், அறிவித்தபடி அந்த நிறுவனம் வட்டித் தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட சுமார் 89 ஆயிரம் பேர், ரூ.1,000 கோடி வரை பணத்தை இழந்ததாக கூறி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wZqRNX9
0 Comments