Crime

பல்லாவரம்: பல்லாவரம் பகுதியில் சட்ட விரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ் நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட மர்ம நபர் குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பல்லாவரம் பகுதியில் வெளிநாட்டு இணையவழி செல்போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி உள்ளூர் சிம் கார்டுகள் மூலமாக இந்தியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகத்துக்கு புகார் வந்தது.இதையடுத்து ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அதில்,டெலிகம்யூனிகேஷன் துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சட்டவிரோத தொலைதொடர்பு நடைபெறுவது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MyjXpqx

Post a Comment

0 Comments