
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உலோக சுவாமி சிலைகளைத் திருடிய 7 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு உலோக சிலைகளை சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக வந்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.பாலமுருகன், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த செல்வம், மூர்த்தி, வைத்தியநாதன், மனோராஜ், விஜி, மணி, மணிகண்டகுமார், குமார் ஆகிய 8 பேரை பிடித்து அவர்களிடமிருந்த திருவாச்சியுடன் கூடிய பச்சைகாளியம்மன், விநாயகர், அம்மன் ஆகிய 3 சிலைகளை கைப்பற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kp9YyQa
0 Comments