
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதி இன்றி மண் அள்ளிய டிப்பர் லாரி, டிராக்டர், ஜேசிபி என 11 வாகனங்களை பறிமுதல் செய்து 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பந்தப்பாறை செல்லும் வழியில் தனியார் நிலத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறம்பு பீட் பகுதிக்கு உட்பட்ட பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்பட்டு செங்கல் சூலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U9F8NRI
0 Comments