
திருச்சி: திருச்சியில் இருந்து சென்ற ரயிலில் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கியதாக சென்னை தலைமைச் செயலக ஊழியரை திருச்சி ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் குமார்(35). இவர், திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சேது அதிவிரைவு ரயிலில் அரவிந்த்குமார் பணியில் இருந்தார். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டு, நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G2WFkbf
0 Comments