
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி, பொய் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும்வகையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், அவிநாசி காவல் நிலைய முதல் நிலைக்காவலர் வேல்முருகன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது கடந்த 4-ம் தேதி இரவு 10 மணிக்கு தனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது, ‘ஹெட்லைன்ஸ் பிஹார்’ என்ற முகநூல் பக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தவறான தகவல் பதிவிடப்பட்டதை பார்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gqdSRIm
0 Comments