Crime

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முகப்பேர் வட்டவடிவ நகர் டிவிஎஸ் அவென்யூ சந்திப்பு அருகே போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவரது பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர், அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணி ரத்னம் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MtgU20m

Post a Comment

0 Comments