Crime

சென்னை: சென்னையில் பொதுமக்களிடம் திருடப்பட்ட பொருட்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சென்னையில் மொத்தம் ரூ.19 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 6,643 பவுன் (53.2 கிலோ) நகைகள், ரூ.2 கோடியே 70 லட்சத்து 87,939 ரொக்கம், 1,487 செல்போன்கள், 425 இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள் மற்றும் 18 இலகுரக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CdlF1oJ

Post a Comment

0 Comments