
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள நடு விக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன் (50). இவர் குடும்பத்துடன் காரைக்குடி சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பூட்டிய வீட்டில் பாட்டு சத்தம் கேட்பதாக அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பாண்டியன், வீட்டைத் திறந்து பார்த்த போது, பாத்திரங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒருவர் தனது செல்போனில் பாடல் கேட்டபடி மது போதையில் கட்டிலில் தூங்கியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mWnGkjP
0 Comments