Crime

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்தவர் ஷாலினி (36). இவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார். ஷாலினி வீட்டுக்கு அவரது அண்ணன் சதீஷ்(38) கடந்த 22-ம் தேதி சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்த 2 பவுன் நகை மாயமாகிவிட்டதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் ஷாலினி புகார் அளித்தார். பின்னர், புகார் திரும்ப பெறப்பட்டது.

இதனால் கோபமடைந்த சதீஷ் உள்ளிட்டோர் ஷாலினி வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியுள்ளனர். பின்னர், அவரை சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வேளச்சேரி போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PST8NLn

Post a Comment

0 Comments