
கோவை: கோவையில் நீதிமன்றம் அருகே, ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். காயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை கோவில் பாளையத்தைச் சேர்ந்தவர் கோகுல் (23). ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே சென்ற கோகுலை, மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cMmbYqI
0 Comments