
திருப்பூர்: குன்னத்தூர் அருகே தோட்டத்துபாளையத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார்.
தேவி இங்கிருக்கும் சொத்தை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியிடம் தெரிவித்துள்ளார். கடந்த 15-ம் தேதி சுப்பிரமணியின் காலில் தேவி விஷ ஊசி செலுத்தினாராம். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணியை, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மீட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவி தலைமறைவான நிலையில், இதுதொடர்பாக சுப்பிரமணி குன்னத்தூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து தேவியை தேடி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SOba9dH
0 Comments