
மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘எக்ஸ்ரே பேக்கேஜ்’ இயந்திரத்தை சிறைத்துறை துணைத்தலைவர் பழனி ஆய்வு செய்தார்.
தமிழக சிறைத்துறைக்கு டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்றதற்குப்பின் சிறைத் துறையில் பல்வேறு மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். சிறைவாசிகள், சிறைக் காவலர்களின் நலன், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைவாசிகளுக்கு இன்டர்காம் தொலைபேசி மூலம் நேர்காணல் வசதி, நூலக மேம்பாடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Fc5J0s
0 Comments