
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே, பல்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் நலசோபரா. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேகா டோர்வி (37) என்ற செவிலியரும் அவரது காதலர் ஹர்திக் ஷா (30) என்பவரும் கடந்த 20 நாட்களுக்கு முன் குடிவந்துள்ளனர்.
இந்நிலையில் அண்டை வீட்டில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில் இவர்களது வீட்டை போலீஸார் கடந்த திங்கட்கிழமை சோதனையிட்டனர். இதில் படுக்கை அறையில், படுக்கைக்கு அடியில் உள்ள பெட்டியிலிருந்து மேகாவின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து அவருடன் வசித்த ஹர்திக் தப்பிச் செல்வதை அறிந்த போலீஸார் அவரை, மத்திய பிரதேச மாநிலம் நாக்டா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6PzZgnq
0 Comments