
ராமநாதபுரம்: தொண்டி அருகே அக்காவை மண் வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூரைச் சேர்ந்த நாகலிங்கம் மனைவி கோவிந்தம்மாள்(60). கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கோவிந்தம்மாள் 25-ம் தேதி காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ள அவரது மகள் ராதா (36) தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இவர் அன்று மாலை தாயாருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தார். இரவு நேரமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருந்ததால் கோவிந்தம்மாள் வீட்டுக்கு வரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nwIMsRq
0 Comments