
திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி (65). உடல்நலக் குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருசாமியை அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். மருத்துவமனையில் உள்ள 4-வது வார்டில் குருசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி குருசாமி இறந்து விட்டார். சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் குருசாமி இறந்துவிட்டதாகக் கூறி அவரது மகள் லிங்கம்மாள் (33), மருமகன் ரவிக்குமார் (43), உறவினர் மணிகண்டன் (31) ஆகியோர் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் ரித்தீஸ் ஆர்த்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரித்தீஸ் ஆர்த்தரை தாக்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1GJBT7j
0 Comments