
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவைச் சேர்ந்தவர் ராமு (61). ஓய்வுபெற்ற ஆசிரியர். சனிக்கிழமை மேலூரிலுள்ள ஒரு வங்கியில் ரூ. 4 லட்சம் எடுத்து தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.
மேலூர்- அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்துச் செல்வதற்காக பைக்கை பள்ளிக்கூடம் எதிரே சாலையோரம் நிறுத்தினார். பின்னர் உள்ளே சென்று பேத்தியை அழைத்துக்கொண்டு திரும்பியபோது, 2 பைக்குகளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் ராமுவின் பைக்கின் பெட்டியைத் திறந்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tWAafqT
0 Comments