Crime

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே வெள்ளிக்கிழமை காலையில், வேகமாக சென்ற பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: தானே மாவட்டம் அம்பர்நாத் என்ற இடத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு போருந்து ஒன்று, அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான ஷீரிடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மும்பையில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள நாசிக்கின் சினார் தெஹ்சில் அருகிலுள்ள பதேர் ஷிவர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kjCmOX1

Post a Comment

0 Comments