
ஆவடி: ஆவடி அருகே உள்ள பொத்தூர் - பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா. இவர் தன் பெயரில் வாங்கிய நிலத்துக்கு பட்டா கோரி, கடந்த 2012 ஜன.9-ல், அப்போதைய பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசுவாமியிடம் மனு அளித்தார். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சுலோச்சனா, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவு 1- போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயணம் தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக சுலோச்சனா கந்தசுவாமியிடம் அளித்தார். அப்போது, அவரை கையும் களவுமாக போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7zihjMP
0 Comments