Crime

காஞ்சிபுரம்/திருவேற்காடு: காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல் திருவேற்காடு அருகே தனியார் பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (42). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக். 22-ம் தேதி 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cTN0Z8g

Post a Comment

0 Comments