Crime

சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள ரேசன் கடையில் சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் விற்பனையாளர் மும்தாஜ் பேகம் மற்றும் ஒட்டுநரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சிவகாசி முஸ்லிம் தைக்கா தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம்(40). இவர் பராசக்தி காலனியில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி கொண்டிருந்தனர். சரக்கு வாகனத்தை முற்றுகையிட்டு வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியம்மாள் மற்றும் பொதுமக்கள் விற்பனையாளர் மும்தாஜ் பேகத்திடம் இதுகுறித்து கேட்டதற்கு, அவர் உரிய விளக்கம் அளிக்காததால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SLXYnWN

Post a Comment

0 Comments