Crime

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.

இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக ஆகாயத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி (73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார்(42), கீழ் வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் உயிரிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GwdkKsa

Post a Comment

0 Comments