Crime

அரூர்: பொம்மிடி பகுதியில் ஒரே நாளில் 10 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 கடைகளில் திருட்டு நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொம்மிடி நகர பகுதியில் ஐஸ்கிரீம் கடை, கணினி மையம், மளிகைக் கடை, ஜவுளிக் கடை, மரப்பட்டறை, பேக்கரி, கண் கண்ணாடி கடை, சோபா கடை உள்ளிட்ட 10 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e9ZCBSz

Post a Comment

0 Comments