
காரைக்கால்: காரைக்காலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் 6 பேரை மண்வெட்டியால் தாக்கிய பெண், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் 3 மாத பெண் குழந்தை, மூதாட்டி உயிரிழந்தனர்.
காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா லட்சுமி(35). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதனிடையே, கர்ப்பமாக இருந்த துர்கா லட்சுமி, பிரசவத்துக்காக, நெடுங்காடு அருகே நல்லாத்தூர் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன் வந்திருந்தார். அங்கு அவருக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OHsGMzp
0 Comments