Crime

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த சேதுராஜா(18) என்பவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சேதுராஜா(18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சேதுராஜா கூலி வேலை செய்து வந்தார். சேதுராஜா பொங்கல் அன்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை வாலாங்குளம் கண்மாயில் சேதுராஜா இறந்து கிடந்தார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hUs3qKi

Post a Comment

0 Comments