
சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்வசிப்பவர் முருகன். உயர் நீதிமன்ற வழக்கறிஞரான முருகன், திமுக வட்டச்செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ராஜாத்தி, பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் முருகனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mFNLWU5
0 Comments