
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே நேற்று ஜல்லிக்கட்டு காளைகள் ஏற்றிச் சென்ற மினி வேனும், அரசுப் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 காளைகளும் உயிரிழந்தன.
விராலிமலை அருகே செவலூரைச் சேர்ந்த முனியப்பன் மகன் மதியழகன்(25), பூலாங்குளத்தைச் சேர்ந்த சின்னப்பா மகன் விக்கி(30) உட்பட 7 பேர் ஒரு மினி வேனில் 3 காளைகளை ஏற்றிக்கொண்டு வன்னியன்விடுதியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு முடிந்ததும் 3 காளைகளையும் அதே மினிவேனில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g0jodny
0 Comments