Crime

கடலூர்: விருத்தாசலம் வட்டம் மேல்பாப் பனப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது பள்ளி மாணவியுடன் செல்போனின் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 02.06.2020 அன்று அந்த மாணவியைப் பார்க்கவிரும்புவதாக கூறி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அந்த மாணவி வர மறுத்துள்ளார். வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று முருகானந்தம் மிரட்டியதால், அன்று இரவு அந்த மாணவி ஓடைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்தமாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1wA2t3G

Post a Comment

0 Comments