Crime

கடலூர்: நெய்வேலி அருகே உள்ள தொப்புலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம். இவரது மகள் அஞ்சலை, மகன் அருள் முருகன். இவர்கள் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களது வீட்டில் வேலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் 5 வயது மகளை கொன்று, முதனை கிராமத்தின் அருகில் உள்ள முந்திரி தோப்பில் புதைத்தனர்.

இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் கைது செய் யப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர். தற்போது நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கமலம் தரப்பினர், ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பணம் தருவதாக தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VuldTKn

Post a Comment

0 Comments