Crime

மதுரை: மதுரை நகரில் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதால் அமைதியான சூழல் நிலவுவதாக காவல் ஆணையர் டி.செந்தில்குமார் தெரிவித்தார்

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகர் காவல்துறை பொது மக்களோடு நட்புடன் இருந்து, அதிநவீன தொழில் நுட்பங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் சமூக விரோதிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022-ல் மாநகர் காவல் நிலையங்களில் 1,685 பதிவேடு ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டனர். இதில் குற்றச்செயலில் ஈடுபட்ட 1,306 பேரில் கஞ்சா விற்ற 54 பேர், ஆயுதங்கள் வைத்திருந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zavEJh3

Post a Comment

0 Comments