Crime

கோவை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், இணையவழிக் குற்றங்களைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தை டிஜிபி சைலேந்திரபாபு சனிக்கிழமை (டிச.10) திறந்து வைத்தார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை டிஜிபி வழங்கினார். பின்னர், காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் 3 புதிய காவல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Iowxut0

Post a Comment

0 Comments