
மதுரை: மதுரை மாவட்டம், கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன்(28). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
இவ்வழக்கில் கைது செயப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்ட அவர், நவ., 21ல் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சமயநல்லூர் பகுதியில் மற்றொரு மூதாட்டியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமயநல்லூர் மகளிர் போலீஸார் அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இருப்பினும், இவ்வழக்கில் அவர் , ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் எதிர்ப்பு தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n2tZUcH
0 Comments