
புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் 2-வது குறுக்குத் தெருவில், பெண்கள் தங்கியுள்ள ஒரு வீட்டுக்கு அவ்வப்போது வெளிநபர்கள் சிலர் வந்து செல்வதாக, வடக்கு எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை, மகளிர் போலீஸாருடன் சென்று சோதனையிட்டனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த 4 பெண்களை மீட்ட போலீஸார், பெண் புரோக்கரையும் பிடித்தனர்.மேலும் அங்கிருந்த 2 செல்போன்கள், ரூ.890 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xoM5ak0
0 Comments