
தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரைச் சேர்ந்தவர் நேசமணி (60), எல்ஐசி முகவர். இவரது மனைவி உஷா பாப்பா. இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூரில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
நேற்று அதிகாலையில் பாவூர்சத்திரத்தை அடுத்த குருசாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு நேசமணி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சென்றனர். ஆராதனை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tpUGAMa
0 Comments