
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் சிறப்பு காவல் படை செயல்பட்டு வருகிறது. இங்கு தளவாய் ஆக பணிபுரியும் காவல் அதிகாரியின் செல்போனில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாட்ஸப் மூலம் குறுந்தகவல் வந்துள்ளது. அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் ராஜ், சந்திரமோகன், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (41), வினய்குமார் (35) ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MTcmlDf
0 Comments