Crime

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொறுப்புக் கணக்கராக பதவி வகித்த சாந்தி என்பவர் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயில் செயல் அலுவலராக ராஜா என்பவர் இருக்கிறார். இங்கு தட்டச்சராக பணியாற்றும் சாந்தி, கணக்கர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சந்தோஷ் குமார் என்பவர் வாடகை செலுத்திய ரசீது புத்தகத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/plbVKiv

Post a Comment

0 Comments