Crime

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் சிலரிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விளையாட்டு பயிற்றுநர் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி, டேக்வாண்டோ பயிற்சி பெற்று வரும்மாணவிகள் சிலரிடம், டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் கடந்த சில மாதங்களாக ஆபாசமாக பேசுவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகள், மாவட்ட விளையாட்டு அதிகாரி சுரேஷிடம் புகார் கொடுத்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hASntGr

Post a Comment

0 Comments