
கோவை: கோவை மாவட்டம் பசுமணி பழங்குடியினர் கிராமத்தில் விளை நிலங்களில் காய்கறிப் பயிர்களுடன் கஞ்சா செடி ஊடு பயிராக பயிரிட்டு வருவதாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்துக்கு வந்து கஞ்சா செடிகளை பார்வையிட்டு விசாரித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v1UAay7
0 Comments