
செங்கல்பட்டு: செங்கை மாவட்டத்தில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 51 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதல் காவல் ஆணையாளர் காமினி தலைமையில், தாம்பரம் மாநகர துணை ஆணையாளர் சி.பி.சக்கரவர்த்தி மற்றும் தடய அறிவியல் துறை இணை இயக்குநர் அமுதா ஆகியோர் கொண்ட குழுவினரை நியமித்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Y2nVUQ
0 Comments